வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த ஈரான்

எந்தவித நிபந்தனைகளுமின்றி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் அந்த கோரிக்கையினை ஈரான் நிராகரித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் விலகியுள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரானிடையே மோதல் நிலவி வருகின்றது. ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் தனது போர் கப்பல்கள், போர் விமானங்களை குவித்து இருக்கிறது.

இந்த நிலையில், எந்த வித முன்நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மைக்பம்பியோ தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஈரானுடன் அமர்ந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்நாட்டுடன் எந்த வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையானவற்றை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” அதே சமயம் ஈரானின் தவறான நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் செயலை அமெரிக்கா தொடரும் என்றார். எனினும், அமெரிக்கா வார்த்தை ஜாலம் காட்டும் வகையில் பேசுவதாக கூறி, ஈரான் அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க