உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரத்தன தேரருக்கு ஆதரவாக மற்றுமொரு தேரர் உண்ணாவிரதக் களத்தில்!

அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக பொலன்னறுவை லங்காபுர சாசனத்தின் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவர் ஸ்ரி பிம்பாராமயவின் பீடாதிபதி யட்டியாகல உபதிஸ்ஸ தேரர் இன்று உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை அவர்களது பதவியிலிருந்து விலக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே அவர் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

இதற்காக பொலன்னறுவை லங்காபுர சாசனத்தின் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பல விகாரைகளின் தேரர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நகரிலுள்ள சகல கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க