உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

ரத்தன தேரரின் போராட்டம் தொடர்கிறது. மாத்தளை.கொழும்பில் ஆதரவுப்போராட்டம்

ரிசாத், அசாத், ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியில் இருந்து விலக்கக்கோரி அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றனர்.

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அவர் கடந்த 31ஆம் திகதி முதல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமது இலக்கை அடைய தமது உயிரைப்பணயம் வைக்க தயார் என்று அத்துரலியே ரத்தன எச்சரித்துள்ளார்.

இதேவேளை அவருக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பின் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவும் மாத்தளை ரத்தோட்டையிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க