உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பிலும் வலுக்கும் போராட்டம்!

கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியூதினையும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியையும் பதவி விலகக் கோரி இந்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தை பிக்குமார்கள் முன்னெடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதினையும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாவையும் ஆசாத் சாலியையும் பதவி விலக்கல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க