உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்த திகதி அறிவிப்பு

டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நவம்பர் மாதம் 15ஆம் திகதி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு இடையிலான காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழு தீர்மானிகும் எந்த ஓர் கால பகுதியிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தாங்கள் தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க