விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து அணியிடம் 136 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 136 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 29.2 ஓவர்கள் நிறைவில் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பில், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அதிக பட்சமாக 52 ஓட்டங்களையும், குசல் பெரெரா 29 ஓட்டங்களையும் திசர பெரெரா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மட் ஹென்ரி மற்றும் ஃப்குஷன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

137 என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

கருத்து தெரிவிக்க