உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெளிநாட்டு இராணுவங்களுக்கு அனுமதி இல்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

வெளிநாட்டு இராணுவங்களுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு இராணுவங்களை அனுமதிக்க போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

பொலன்றுவை பகுதியில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு இராணுவங்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க