உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ரத்தன தேரருடன் இணையும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நாடாமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவே அவர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் நேற்றைய தினம் கண்டியில் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி, மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இந்த உண்ணாவிரதத்தை தேரர் ஆரம்பித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க