வெளிநாட்டு செய்திகள்

முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழக்கிறது:அமெரிக்கா

அமெரிக்கா வழங்கிய முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழப்பதாக ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் அறிவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த முடிவில் எவ்வித மாற்றமும் இருக்காது என வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தகவலை அடுத்து இவ்வாறு உறுதியாகியுள்ளது.

முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியது. குறிப்பாக, அமெரிக்காவின் உள்நாட்டு சந்தை வர்த்தக போக்குவரத்துக்கு, அமெரிக்காவை நியாயமான முறையில் அனுமதிக்க வேண்டும் என்ற ஜி.எஸ்.பி. திட்டத்தின் மூலம் முன்னுரிமை பெற்ற வர்த்தக நாடு எனும் அந்தஸ்தை இந்தியா பெற்றது.

இந்த ஜி.எஸ்.பி. திட்டத்தில் ஊடாக பெருமளவு பயனடையும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 5.6 பில்லியன் டொலர் பெறுமதியான இந்திய பொருட்களின் ஏற்றுமதி, எவ்வித வரி விதிப்பும் இன்றி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனால் இந்தியாவிற்கு 130 கோடி ரூபாய் அளவிலான செலவு குறைகிறது. இந்த ஜி.எஸ்.பி. திட்டத்தில் இருந்து இந்தியா நீக்கப்பட்டால் ஆபரண கற்கள், ஆடை, தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் அமெரிக்காவை சமமாக நடத்தவும், அணுகவும் அனுமதிக்கவில்லை என்ற காரணத்தால் இந்த அந்தஸ்து நீக்கப்படுவதாக ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் கூறினார்.

இதன்காரணமாக முன்னுரிமை வர்த்தக நாடு எனும் தகுதியை இந்தியா இழப்பதாகவும், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் இது அமல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க