உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியவில் மான் இறைச்சியுடன் இருவர் கைது

மான் இறைச்சியை தன் வசம் வைத்திருந்த இருவரை நேற்று மாலை மஸ்கெலிய காவல்துறையினர் கைது செய்தனர்.

மிருகங்கள் வேட்டையாடப்படுவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சாமிமலை பகுதி பெருந்தோட்டம் ஒன்றுக்கு விரைந்த மஸ்கெலிய காவல்துறையினர்; இந்த இருவரையும் கைதுசெய்தனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ மதிக்கதக்க மான் இறைச்சி கைப்பற்றப்பட்டது.
இவர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க