உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ஞானசார தேரர் விடுதலை – பட்டாசு கொளுத்தி ஆதரவாளர்கள் ஆரவாரம்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து இன்று மாலை வெளியேறினார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் பலசேனா அமைப்பின் ஆதரவாளர்கள் அணிதிரண்டிருந்ததால், மாற்றுவழி ஊடாகவே ஞானசார தேரர் வெளியேற்றப்பட்டார் என சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற தகவல் வெளியானதும், நாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி, அவரின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

கருத்து தெரிவிக்க