உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

ரிஷாட்டை கைவிடுகிறது கூட்டமைப்பு – அவசரமாகக் கூடுகிறது நாடாளுமன்றக் குழு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என்று பிரதான சிங்கள ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இப்பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கூட்டத்தில் நேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும்,  இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு  இவ்வாரம் கூடவுள்ளது என்றும், இதன்போது உறுதியானதொரு முடிவு எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க