இந்திய கிரிக்கட் அணியின் வீரர் யுவ்ராஜ் சிங் கிரிக்கட்டில் இருந்து ஓய்வுப்பெற திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்தாலோசித்துள்ளார்.
அத்துடன் அதன் ஒத்துழைப்புடன் வெளிநாடுகளில் இடம்பெறும் 20க்கு20 போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.
இதனை இ;ந்திய கிரிக்கட் சபை தரப்புக்களும் உறுதிசெய்துள்ளன.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் அதிலிருந்து மீண்டபின்னர் பெரிதாக போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லை.
இந்தநிலையிலேயே அவரின் தீர்மானம் வெளியாகியுள்ளது.
தமது தீர்மானத்தை அவர் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க