உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கைதான, நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளர்,தௌஹீத்தின் ஜமாவின் முக்கிய உறுப்பினர்.

ஸஹ்ரான் ஹாசிமின் தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர் என்றுக்கூறி கைதுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளர், அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் சங்க்ரி லா விருந்தக தற்கொலைத்தாரிக்கு நெருங்கியவர் என்றும் கூறப்படுகிறது.

குருநாகல் வைத்தியசாலையில் கைதுசெய்யப்பட்ட தௌஹீத் ஜமா அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கண்டி அலவத்துக்கொடையை சேர்ந்த இவர் நேற்று ராஜகிரியவில் உள்ள வீட்டில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் அடிக்கடி அக்குரனையில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தௌஹீத் ஜமா உறுப்பினர்களை சந்தித்து வந்துள்ளார்.

அத்துடன் அக்குரனையில் உள்ள சில பாதுகாப்பு கடவைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அகற்றமுடியும் என்று அவர் தமது சகாக்களிடம் உறுதியளி;த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் அவர் அமைப்பின் பல ஆவணங்களை அழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க