உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம்.ஆனால் பாதுகாப்பு அவசியம்- மத்திய வங்கி ஆளுநர்

பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு, மேலும் வன்முறை ஏற்படாமல் தடுக்கப்படுமானால், இலங்கையின் பொருளாதாரத்தை விரைவில் சீர்செய்யமுடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.

எனினும் வரவுசெலவுத்திட்டத்தின் துண்டுவிழும் தொகை அதிகரிக்கும் என்றும் அவர் கொழும்பி;ல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்தை பார்க்கும்போது சுற்றுலாத்துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

மொத்த வருமானத்தில்,இந்தத்துறையின் பெறுமதிசேர் வரி அறவீடு குறையும்.

எனினும் சுற்றுலாத்துறையின் பெறுமதிசேர்; வரி வருமானம், மொத்த வருமானத்தில் 5வீதப்பங்கையே கொண்டிருப்பதால் அது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் பொருளாதாரம் மேம்படவேண்டுமானால், பாதுகாப்பு மேம்படவேண்டும் என்றும் இந்திரஜித் குமாரசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க