உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

உப்புநீரில் எரியும் விளக்குடன் முல்லைத்தீவு காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் இன்று இடம்பெற்றது.

கடந்த 13.05.2019 அன்று முல்லைத்தீவு பெருங்கடலில் உப்புநீரில் விளக்கெரியும் அற்புத காட்;சிக்காக தீர்த்தம் எடுத்துவரப்பட்டு உப்புநீரில் விளக்கேற்றப்பட்டது.

ஆலய உற்சவத்தில் இன்று இரவு வளர்ந்து நேர்ந்து பொங்கல் இடம்பெற்றதுடன் நாளை 20.05.2019 அதிகாலை வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்துக்கான பண்டம் இந்த ஆலயத்திலிருந்து எடுத்து செல்லப்படும்

ஆலயத்தில் விசேட கண்ணகியின் வரலாறு கூறும் (புராதன ஓலைச் சுவடி )ஏடு படிக்கும் வைபவமும் சிறப்புற இடம்பெறுகிறது

கருத்து தெரிவிக்க