உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ரிஷாத்தின் வீட்டில் வாகன இலக்கத்தகடு – தகவல் தருகிறார் சார்ல்ஸ் நிர்மலாநாதன்

கூட்டு எதிர்க்கட்சியினால் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் கைத்தொழில் வணிக வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட தமிழராசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப்பிரேரணை தொடர்பாகவும் ஆராய நேற்று சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இந்தக்கூட்டம் இடம்பெற்றது.
தற்போது அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் தமிழ் மக்கள் திட்டமிட்டு பழி வாங்கப்படுவதனாலும் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மீது திட்டமிட்டு குற்ற நடவடிக்கைகள் எடுப்பதனாலும் நிச்சயமாக அவசரகால சட்டத்தை எதிர்க்க வேண்டும் என இதன்போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவளிப்பதென்று இந்தக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறுக்; குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக அமைச்சர் ரிசாட் பதிவுதீன் மூன்று தடவை இராணுவ தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மூலமாக மன்னார் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழைந்துள்ளது.
அதே நேரத்தில் அண்மையில் தாராபுரம் பகுதியில் அமைச்சருக்கு சொந்தமான விடுதியில் சந்தேத்திற்கு இடமான இலக்கத்தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும்; குறித்த இலக்க தகடானது இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்தினால்; (ஆர்.எம்.பி) விநியோகிக்கப்படவில்லை
ஏதோ ஒரு வகையில் தவறான நடவடிக்கைக்காகவே குறித்த இலகக்கத் தகடு பயன்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே இது தொடர்பான முழுமையான விசாரணைகள் நடத்துவதற்காக அவருக்கு எதிராக கொண்டு வரப்படுகின்ற நம்பிக்கை இல்லாப்பிரேரணையை ஆதரித்து அவருக்கு இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? இல்லையா?
என்பது தொடர்பாகவும் குறுகிய காலத்தில் அவர் எவ்வாறு செல்வந்தராக வந்தார்? என்பது தொடர்பாகவும் விசாரணைக்கு கோரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்தநிலையில் ஒட்டு மொத்த மன்னார் தமிழ் அரசுக்கட்சி உயர் மட்ட குழுவினராலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

கருத்து தெரிவிக்க