உள்நாட்டு செய்திகள்

ரிஷாட்டுக்கு கழுத்தறுப்பு செய்ய இடமளியோம் – தோள் கொடுக்க தயாராகிறார் ஹக்கீம்

” அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம்.”  என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்குமிடையில் அரசியல் ரீதியில் போட்டி நிலவினாலும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளின்போது ஓரணியில் இணைந்து செயற்படுவோம் என்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர்கள் சிலரால் இன்று எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கண்ட தகவலையும் வெளியிட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க