உள்நாட்டு செய்திகள்

தடைகளையும் தாண்டி யாழ். பல்கலையில் நினைவேந்தல்

அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலில் பல்கலைக்கழக சமூகம் நினைவு கூர்ந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும்,கல்விசார் மற்றும் சாரா ஊழியர்களும் இணந்து நினைவேற்றலில் பங்கெடுத்திருந்தனர்.பொது சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால், இம்முறை நினைவேந்தல் நிகழ்வு நடைபெறாது என்று சிலர் தகவல்களை பரப்பினர். ஏற்பாட்டுக் குழுவினருக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தடைகளையும் தாண்டி நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க