வெளிநாட்டு செய்திகள்

காவி உடை அணிந்து இமயமலை குகையில் மோடி தியானம்

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது.
இதனையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.
முன்னதாக இராணுவ விமானம் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார்.

கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள அந்தக் கோயில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தீபாவளியன்று மோதி கேதார்நாத் சென்றது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க