உள்நாட்டு செய்திகள்

அடுத்து என்ன? 22 இல் பங்காளிகளை சந்திக்கிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் குறித்த சந்திப்பு நடைபெறும் என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

21/4 தாக்குதலின் பின்னர் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

 

 

 

கருத்து தெரிவிக்க