உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சமாதானத்தை உறுதிப்படுத்துமாறு சுவிட்ஸர்லாந்து கோருகிறது.

இலங்கையில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிட்ஸர்லாந்து கோரியுள்ளது.

அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையிலேயே இந்த கோரிக்கையை சுவிட்ஸர்லாந்து விடுத்துள்ளது.

இலங்கையின் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

அண்மைக்காலமாக இலங்கையி;;ல்; வன்முறைகள் அதிகரித்துள்ளன.

தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கான காரணங்களை இன்றும் இலங்கையின் அரசாங்கங்கள் நிவர்த்திச்செய்யவில்லை.

இந்தநிலையில் இலங்கையின் சமாதானத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயார் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க