இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் மதிப்பெண் வழங்கும் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு மனு தாக்கல்

பதுளை மாவட்டத்திலிருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வௌியானதாக கூறப்படும் மூன்று கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில்
அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இம்மனுவின் பிரதிவாதிகளாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க