உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை  இன்று (17) மாலை நீக்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும், கம்பஹாவிலும் கடந்த 13 ஆம் திகதி வன்முறை தலைதூக்கியதையடுத்து, பேஸ்புக் , வட்ஸ்அப், வைபர், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களின் மூலம் பரவும் வதந்திகளை தடுக்கவே இந்த தற்காலிக தடைவிதிக்கப்பட்டது என்று அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையிலேயே இன்று அத்தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க