இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கம்பஹா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா தாழ்நிலப் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க திவுலபிட்டிய,மீரிகம, அத்தனகல்ல,மஹர,கம்பஹா,ஜா-எல ,மினுவாங்கொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க