இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அனுப பாஸ்குவலினுடைய இரு வங்கி கணக்குகளுக்கு தடை

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் கொக்கல மற்றும் மத்துகமவில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரான அனுப பாஸ்குவலின் இரு வங்கிக் கணக்குகளை தடை செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 10) கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கிணங்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரு வங்கிக் கணக்குகளை தடை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்து தெரிவிக்க