இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் கருத்து

நேற்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க நேற்று தரம் 05 பரீட்சைக்காக 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனரெனவும் நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

மேலும் நேற்று நிறைவடைந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகுமென அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க