புதியவைவணிக செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்துடனான எந்த கலந்துரையாடலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் மற்றும் நிபந்தனைகள் நாட்டு மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் என்பன சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான யோசனையல்லவென குறித்த அறிக்கையில் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க