உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலைமை பிரகடனம்

இன்று (ஓகஸ்ட் 22) மும்பையிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலுக்கமைய கேரளா திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க விமானத்தில் பயணித்த 135 பேரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.அத்தோடு வெடிகுண்டு தேடுதல் பணிகளும் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க