விளையாட்டு

இலங்கை அணியில் அறிமுகமாகும் இளம் சுழல்பந்து வீச்சாளர்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அகில தனஞ்சயவிற்கு பதிலாகவே அவர் இலங்கை அணியில் இணைந்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தோடு, 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்தப் பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவுஸ்தி​ரேலியாவின் பிரிஸ்பேர்னில் நடைபெறவுள்ளது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு விளையாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க