புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

27 வருடங்களின் பின் இலங்கை அணிக்கு கிடைத்த வெற்றி

நேற்று (ஓகஸ்ட் 07) கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

அதையடுத்து 249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.இவ்வெற்றியானது 27 வருடங்களின் பின் இலங்கைக்கு இந்திய அணியுடனான இருதரப்பு ஒருநாள் தொடர் போட்டியில் கிடைக்கப்பெற்ற வெற்றியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க