புதியவைவணிக செய்திகள்

வட்டி வீதத்தை திருத்துவது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 05) ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் வட்டி வீதம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை திருத்துவதற்கான தீர்வு யோசனை அடங்கிய அறிக்கையொன்றினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் பல சிரேஷ்ட பிரஜைகளின் முக்கிய வருமானம் மற்றும் ஓய்வு காலத்தின் போது வழங்கப்படும் வங்கி வைப்புத்தொகை என்பன நிலையான வட்டியிலிருந்தே பெறப்படுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க