உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதத்தை களைவதற்கு சீனா உதவும் என்று சீன ஜனாதிபதி உறுதி

இலங்கையில் பயங்கரவாதத்தை களைவதற்கு சீனா உதவும் என்று சீன ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கு சென்றுள்ள இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று பீஜிங்கில் சந்தித்தபோதே இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் பாதுகாப்பு அவசரநிலையைக் கருத்தி;ற்கொண்டு ஜனாதிபதி சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய, 260 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க சீன ஜனாதிபதி இணங்கினார்.

அத்துடன் இலங்கையின் காவல்துறைக்கு மேலும் 150 பில்லியன் ரூபாகள் பெறுமதியான 100 ஜீப் வாகனங்களை வழங்கவும் சீன ஜனாதிபதி உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இவை தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளில் இரண்டு நாட்டு ஜனாதிபதிகளும் கையெழுத்திட்டனர்.

இதேவேளை பொய்யான செய்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் நிபுணர்களை அனுப்புவதாகவும் சீன ஜனாதிபதி உறுதியளித்ததாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க