உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வன்முறையாளர்களை விடுவிக்க உதவவில்லை- தயாசிறி மறுப்பு

குருநாகல், ஹெட்டிப்பொல பகுதியில் 6 வன்முறையாளர்களை விடுவிக்க உதவியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்டபோது தாம் காவல்துறைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது காவல்நிலையத்தை பலர் முற்றுகையிட்டிருந்தனர்.

இந்தநிலையில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக குறித்த 6 வன்முறை சந்தேகத்துக்குரியவர்களையும் பிங்கிரிய காவல்துறை நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையே சிலர், தாம் அவர்களை விடுவித்ததாக குற்றம் சுமத்துகின்றனர் என்று தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க