இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

நேற்று (ஜூலை 23) கொழும்பு வார்ட் பிளேஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நேற்று 119 அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில்
மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவரால் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க