இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய கருத்து

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகன இறக்குமதி தொடர்பில் இன்று (ஜூலை 18) கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவற்றுள் அதிகமான
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாகன இறக்குமதி தொடர்பான குழு அறிக்கையொன்றை ஓகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க