இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

யாழ் கொடிகாமம் பகுதியில் 87 கிலோ கேரள கஞ்சா மீட்பு

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த 47 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொடிகாமத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரே தனக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சந்தேக நபர் தெரிவித்ததற்கமைய
கொடிகாமத்திலுள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 87.67 கிலோ கிராம் கேரள கஞ்சா சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க