இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள இணக்கம் குறித்து மனுஷ நாணயக்கார கருத்து

பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த சம்பள அதிபரிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அது தொடர்பில் முறையான ஒரு இணக்கப்பாட்டை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதற்கிணங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலானது அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டு கடந்த மே 1ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கிணங்க நேற்று (ஜூலை 11) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க