உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

வன்முறைகள் – விசாரணைக்கு விசேட பொலிஸ் குழு

குருணாகலையில் கடந்த இரண்டு நாட்களாக பதிவான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தால், விசேட  பொலிஸ் குழுவொன்று  அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தலைமையிலேயே இந்த குழு செயற்படவுள்ளது.

சம்பவங்கள் பதிவான இடங்களுக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர் என்றும், பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகலை மாவட்டத்தில் , குளியாப்பிட்டிய, ஹெற்றிபொல, பிங்கிரிய, தும்மலசூரிய,ரஸ்நாயகபுர, கொபேய்கன்ன ஆகிய காவல்துறை பிரிவுகளில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

கருத்து தெரிவிக்க