உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

வடமேல் மாகாணம் முழுதும் இன்றிரவும் ஊரடங்கு

வடமேல் மாகாணத்தில் இன்று (14) மாலை 6 மணி முதல் நாளை (15) காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணம் முழுதும் நேற்று மாலை முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று மாலை 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் மீண்டும் நடைமுறையில் இருக்கும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

 

 

கருத்து தெரிவிக்க