இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மூன்று புதிய நியமனங்கள் வட மாகாண ஆளுநரால் வழங்கி வைப்பு

நேற்று (ஜூலை 03) வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் வடமாகாணத்திற்கான 03 புதிய நியமனங்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கிணங்க வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளராக திருமதி சி.சுஜீவாவும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக திருமதி கு.காஞ்சனாவும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளராக திருமதி அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க