ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளரான நாமல் குமார இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரக்காபொல பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடொன்றை பதிவுசெய்த வந்திருந்தவேளையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தி தென்னிலங்கை அரசியலில் கடந்த காலங்களில் நாமல் குமார பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அமித் ஜீவன் வீரசிங்ஹவும் தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க