உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

டுவிட்டரும் முடக்கம் – கண்காணிக்க விசேட குழு

சமூக வலைத்தளங்கள்மீது தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீடிக்கின்றது.

முகநூல், வட்ஸ்அப், வைபர் போன்றன முடக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் டுவிட்டரும் முடக்கப்பட்டுள்ளது.

சிலாபம், குளியாப்பிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று பரவிய வன்முறைகளை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூகவலைத்தளங்களின் ஊடாக அனாவசிய பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் விசேட பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க