இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம்

நாட்டில் சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதனால் அவர்களுக்கு உடனடியாக தொழில் வழங்குமாறு கோரி நேற்று (ஜூன் 18) பத்தரமுல்லை தியத உயன முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதற்கிணங்க பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்ற வீதிக்குள் நுழைய முற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க