இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் யோசனை அரசியலமைப்பு சபையில் நிராகரிப்பு

இன்று (ஜூன் 18) சபாநாயகர் தலைமையில் கூட்டப்பட்ட அரசியலமைப்பு சபையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் பரிந்துரைக்கு ஆதரவாக 3 வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியலமைப்பு சபையில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவி காலத்தை நீடிப்பது தொடர்பான வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிகாலம் இம்மாதத்துடன் நிறைவடைகின்றது.

கருத்து தெரிவிக்க