உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

விமான விபத்தில் காலமான மலாவி துணை அதிபரின் பூதவுடல் நல்லடக்கம்

கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டின் துணை அதிபரான சவுலோஸ் சிலிமா கடந்த 10ம் திகதி தலைநகர் லிலொங்வேயிலிருந்து விமானத்தில் பயணம் செய்தபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.

அதற்கிணங்க மலாவி துணை அதிபரின் இறுதிச்சடங்கானது அவரின் சொந்த ஊரான சைப்பே நகரில் இன்று நடைபெற்றது.இதில் மலாவி துணை அதிபரின் உறவினர்கள் ,நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு இறுதிச்சடங்குகளின் பின் சைப்பே நகரிலேயே மலாவி துணை அதிபர் சவுலோஸ் சிலிமாவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இவ்விமான விபத்துக்குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும்படி மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க