உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

‘அரசியலுக்கு வரவேமாட்டேன்’ – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

” அரசியல் களத்துக்குள் பிரவேசிப்பதற்கு எனக்கு ஒருபோதும் ஆசை கிடையாது.” – என்று  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

21/4 தாக்குதலையடுத்து நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதிலும், இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதிலும்  பேராயர் பெரும் பங்கு வகித்தார். சம்பவ இடங்களுக்கு நேரில் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு அகிம்சைவழி பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

இதையடுத்து அரசியல் வாதிகள் பலரும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பாராட்டிவருகின்றனர். இதனால், அரசியல் கோணத்திலும் இவ்விவகாரம் பார்க்கப்பட்டது. இந்நிலையிலேயே இன்று பேராயர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதில், ”இறைவனுக்கும், பேரன்புக்குரிய மக்களுக்கும் சேவையாற்றுவதே எனது அரசியலாகும். கட்சி அரசியலையோ அல்லது அரசியல் கட்சிகளையோ நான் பின்பற்றுவதில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க