இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனதா கட்சியின் தலைவர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதனையொட்டி நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் தனது பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக சனிக்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவியேற்பு விழாவில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பங்கேற்க உள்ளார்.

கருத்து தெரிவிக்க