இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

புகையிரதம் தடம் புரள்வு

ஹட்டன் மற்றும் கொட்டகலை மலையகத்தின் புகையிரத நிலையங்களுக்கிடையில் நேற்று (ஜூன் 03) மாலை புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலையகம் செல்லும் புகையிரத சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க