புதியவைவெளிநாட்டு செய்திகள்

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் தீவிபத்து:33 பேர் பலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ எனப்படுகின்ற சிறார்களுக்கான விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ராஜ்கோட் உட்பட 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும்,பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க